Wednesday, April 26, 2006

கொழும்பு குண்டு வெடிப்பு- ஒரு சதி

கொழும்பில் இராணுவ தலைமையகத்தில் செவ்வாய்க் கிழமை (25/04/2006) சிறிலங்காவின் இராணுவத்தளபதியைக் குறி வைத்து நடாத்தப் பட்ட குண்டுத்தாக்குதல் சமாதானப் பேச்சு வார்த்தைகளைச் சீர்க்குலைக்கும் நடவடிக்கையாகவும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான எண்ணக்கருத்தை உருவாக்கு முகமாகவும் நடாத்தப்பட்டது என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.

விடுதலைப் புலிகளால் இக்குண்டுத் தாக்குதலுக்கான தொடர்பு உறுதியாக மறுக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் இக் குண்டுத்தாக்குதலால் நன்மையடையக் கூடிய சக்திகள் யார் என்பதை நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும். அதியுச்சப் பாது காப்பு வலையத்தில் இராணுவத்தின் உயர் பதவி வகிக்கும் ஒருவரைத் தேடிச் சென்று அழிப்பது என்பது அதுவும் நீண்ட நேரம் காத்திருந்து அவர் பகலுணவுக்காக வெளிவரும் வரை காத்திருந்து தாக்குவது என்பது பல காரணங்களுக்காக நம்பகத்தன்மை அற்றுப் போகின்றது.

1. இவ்வாறான உச்சப் பாது காப்பு வலையத்தை அண்மிக்க முதலே பல வீதித் தடைகளையும் சோதனைச் சாவடிகளையும் தாண்டி வர வேண்டியதிருக்கும். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அதி சக்தி வாய்ந்த குண்டினைப் பொருத்திய தற்கொலைக் குண்டுதாரி இத்தனை சோதனைச் சாவடிகளையும் தாண்டி குண்டுகளுடன் வருவது என்பது ஒரு நகைச்சுவையே.

2. தற்கொலை நோக்கிற்காக வந்தவர் இராணுவத் தளபதி வெளியில் வரும் வரை காத்திருந்து தாக்கியது என்ற கூற்று. அதி உச்சப் பாது காப்பு பிரதேசத்தில் தேவையற்று நிற்பது சந்தேகத்தை உண்டாக்கும். அதுவும் ஒரு தமிழ்ப் பெண் நிற்பது உடனடிக் கவனத்தைப் பெறும். சாதாரண சிங்களப் பொது மக்களே சந்தேகப் பட்டு காட்டிக் கொடுத்து விடுவார்கள்.

இந்த இரண்டு காரணங்களாலும் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதல் என்பது விடுதலைப் புலிகளே மறுப்பது போல அடிபட்டுப் போகின்றது.

அப்படியென்றால் இவ்வகையான ஒரு குண்டுத் தாக்குதலால் பயனடையப் போவது யார்?

இவ்வகையான ஒரு குண்டுத் தாக்குதலால் தமிழர் தரப்பை விட சிங்களத் தரப்பில் பயனடையப் பலர் காத்திருக்கின்றார்கள்.

முதலாவது மகிந்த ராஜபக்ஸ. பேச்சு வார்த்தைகள் தொடரப் படவேண்டும் என்ற சர்வதேச நெருக்குவாரமும் அதற்கு எதிரான தோழமைக் கட்சியான ஜே.வி.பி கொடுத்துக்கொண்டிருக்கும் பயமுறுத்துதல்களும் அவரை நிம்மதியிழக்கச் செய்திருக்கின்றது. பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றால் குறைந்த பட்ச அதிகாரத்தையேனும் தமிழர் தரப்புக்குக் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கும் அவரால் சிங்களத்தின் காவலன் என்ற பெயரைத் தக்க வைக்க முடியாத நிலமை ஏற்படும். அதனால் சூனியமாகும் அரசியல் எதிர்காலம். இதனை தவிர்த்துக் கொள்ள திட்டமிட்ட வகையில் ஆரம்பிக்கப் பட்ட திருமலை இனக்கலவரம் பிசுபிசுத்துப் போக புதிய முயற்சியாக இதனை ஆரம்பித்திருக்கலாம்.

இக்குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து திருமலையில் விமானக் குண்டு வீச்சு. அதிக சென்சிற்றிவ் ஆன பிரதேசமாக வேகமாக உணர்ச்சித் தீ பற்றிக் கொள்ளக் கூடிய மூவின மக்களும் செறிந்து வாழும் திருமலை தெரிவு செய்யப்பட்டமை இதை உறுதிப் படுத்துகின்றது. நான்காம் ஈழப் போரில் சிங்களம் திருமலையை தமிழர் தரப்பிடம் இழந்து விடலாம் என்ற பயம். அல்லது திருமலையில் அதிக கவனத்தை வைத்திருக்கும் அன்னிய சக்தியின் தூண்டுதல் காரணமாயிருக்கலாம்.

இரண்டாவது ஜே.வி.பி. இழந்த அரசியல் செல்வாக்கை மக்களிடம் இனவாதத் தீயைக் கக்கி மீட்டுக் கொள்ளல் . மகிந்த அரசிற்கு அதிக நெருக்கடிகளைக் கொடுத்து பேரம் பேசும் வலுவை அதிகப் படுத்தல்.நோர்வேக்கு எதிரான வெளியேற்றக் கோஷம் 7 அமைச்சுப் பதவிகள் வரை மகிந்த ராஜபக்கஸவால் கொடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. மற்றும் ஆட்சிமாற்றத்தை வேகப்படுத்த இராணுவத்தின் ஒட்டு மொத்த ஆதரவைப் பெறும் வகையில் மகிந்தவுக்கு ஆதரவான இராணுவத் தலமையை அகற்றுதல்.

சமீப காலமாக ஜே.வி.பி இன் அங்கத்தவர்கள் இராணுவத்தில் பெருமளவில் ஊடுருவியிருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. அவர்களது -மக்கள் அரசியலால் முடியாது எனினும்- புரட்சிகர அரசியல் மாற்றத்தை அவர்கள் இன்னும் மறந்து விடவில்லை. இரண்டு முறை தோல்வியடைந்த புரட்சியை மூன்றாவது முறையும் முயற்சிக்கப் பின் நிற்க மமட்டார்கள்.

மூன்றாவது விடுதலைப் புலிகளுக்கெதிரான சர்வதேசத் தடையை ஊக்கப் படுத்தி இலங்கைத் தீவில் தமிழர் போராட்டத்தை நசுக்கி தமது ஆதிக்கத்தையும் நலனையும் எதிர் பார்த்திருக்கும் அன்னிய சக்தி அல்லது சக்திகள்.

நான்காவது தொடரும் போரினால் ஆயுதவிற்பனையை ஊக்கப்படுத்தி கொழுத்த பணம் சம்பாதிக்க முயலும் ருசி கண்ட ஆயுத வியாபாரிகள் மற்றும் இடைத் தரகர்கள்.


இந்த நான்கு தரப்பின் தலையீடும் சதியும் இத்திட்டமிட்ட குண்டு வெடிப்பில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற உறுதியான சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.

இக்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட முன்னரே விடுதலைப் புலிகளின் மீது குற்றம் சாட்டப்பட்டு தமிழ் மக்களின் மீது விமானத் தாக்குதல் நடாத்தப் பட்டது. இத்தகைய விமானத் தாக்குதல் விடுதலைப் புலிகளை ஆத்திரமடைய வைத்து போரைத் துவங்குவதை சம்பந்தப்பட்ட தரப்பு எதிர்பார்க்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. பொறுப்புள்ள அரசாங்கம் மக்கள் வாழ்விடங்கள் மீது குண்டு போட்டுத் தாக்குவதில் காட்டிய அவசரத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் யாரும் கண்டிக்கவில்லை.

தமிழர் தரப்பைத் தவிர்த்து சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரு வலிந்த போரினையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்ற வலிந்த சந்தேகத்தை இது ஏற்படுத்துகின்றது. விடுதலைப் புலிகளின் பொறுமை இவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது.

இதனால் தங்கள் நோக்கத்தில் வெற்றியடைய கொழும்பைச் சுற்றியோ அல்லது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களிலோ வலிமையான இன்னுமொரு குண்டு வெடிப்பு இடம் பெறலாம். வழமை போல அதுவும் விடுதலைப் புலிகளின் தலையில் சுமத்தப் பட சர்வ தேசம் மெளனம் காத்து நிற்கும்.

ஆனால் இம் முறை மேற்கு நாடுகளில் இக்குண்டு வெடிப்பு பற்றி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் விடுதலைப் புலிகள் என்பதை கவனமாகத் தவிர்த்து " பெண் தற்கொலை தாரி " என்றே செய்தி வெளியிட்டமை அவர்களுக்கும் இதே சந்தேகம் இருக்கின்றது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

இவ்வளவு இருந்தும் சர்வதேச சமூகம் வாய் மூடி மெளனமாக இருப்பது ஏன்? இந்த சதியை அம்பலப் படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு புலம் பெயர் மண்னில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் இருக்கின்றது.

14 comments:

Anonymous said...

நல்லது சொன்னீர்கள். தெளிவான காரணங்கள் சர்வதேசமும் புலம்பெயர்ந்த தமிழரும் கண் திறக்கட்டும். நன்றி

Anonymous said...

aamaam,petija kandu piddippu.pookira pookkaiparthal pulirajeevai kathikamatai maatu ejakkathavajai amithalinkathai evataijume kollavillai.mathija vankijil kundu vaikavillai,airpotdai adikavillai.enrum eluthunkoovan.sarvathesa sammokam kannai thiranthuthan vaithitukku.ennum koncha nalil puli ennapadu pada pookuthenru kanmunne kaanathan pookireekal.ethanainalaikuthan avankalumpulikku sellam kaadi konchi kondu etuppankal.aadunkoo,aadunkoo!netum enrun sethu poona aavikal ungalai enijum summa vidathu.

இளந்திரையன் said...

வருகைக்கு நன்றி அனானிகள். மிக இறுக்கமான ஒரு பாதுகாப்புப் பிரதேசத்திற்குள் அதுவும் இராணுவ மயப்படுத்தப் பட்ட காவல் நிறைந்த இடத்தினுள் விடுதலைப் புலிகள் சென்று தாக்குவது முடியுமானால் .. இலங்கை இராணுவம் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை.

இப்படியொரு கேள்வியை குழந்தைப்பிள்ளையிடம் கேட்டாலும் ... முடியாது என்று தான் சொல்லும். சொல்வதற்கு ஆட்கள் இருந்தாலும் கேட்பவர்கள் ஒன்றும் கேணையர்கள் அல்லவே....

நியோ / neo said...

இந்தச் சம்பவம் தொடர்பாக நான் இதுவரை படித்த (ஈழவர்களால் எழுதப்பட்ட ) பதிவு உங்களுடையதுதான். உங்கள் பார்வையும் யோசிக்க வைப்பதுதான்.

உங்கள் பார்வையிலேயே இதற்கும் தகுந்த காரணங்கள் (இருந்தால், பட்டால்) சொல்லுங்கள் - அதாவது தமிழகத்திலே இப்போது தேர்தல் 'காய்ச்சல்' பீடித்திருக்கும் வேளையில் - 'சிங்களர்கள்' இது போன்ற 'உள்குத்து' நடத்தினால் - தமிழ்நாட்டுத் தமிழர்கள் இதைக் கண்டு கொள்ள அவகாசம் இருக்காது; இந்திய அரசையும் தமிழக அரசியல் கட்சிகள் 'ஈழத் தமிழர்களை' காப்பாற்றுங்கள் என நிர்ப்பந்திக்க மாட்டார்கள் - என்பது மாதிரி எண்ணத்தில் செய்திருப்பார்களா?

அல்லது - இந்த 'Timing'-க்கான Political Logic என்னவாக இருக்கும் - அதாவது உண்க்கள் பார்வை சரியாக இருந்தால்?

இளந்திரையன் said...

உங்கள் வருகைக்கு நன்றி நியோ. ஈழப் பிரச்சனையைச் சுற்றி நடக்கும் விடயங்கள் மயக்கம் தரக் கூடியன. ஆனால் உண்மை நிலமை என்பது இன்று மிகவும் சிக்கலாகிவிட்டது.

ஆனாலும் மேலோட்டமாக கோடிட்டுக் காட்டுகின்றேன்.

ஈழப்பிரச்சனையில் தமிழக மக்களின் உணர்வுகள் என்றும் ஈழத்தமிழ் மக்களுடன் இருக்குமென்றாலும் ஈழப்பிரச்சனை என்பது என்றோ இந்தியக் கரைகளைக் கடந்து சென்று விட்டது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மையங் கொண்டிருக்கும் வல்லாதிக்கப் போட்டியில் இந்தியா சீன ஜப்பான் நாடுகளுடன் அமெரிக்காவும் அதனுடன் பாகிஸ்தானும் களம் இறங்கத் துணிபு கொண்டு விட்டன.

சோவியத்தின் உடைவு அமெரிக்காவை சண்டப் பிரசண்டன் ஆக்கிவிட்டதைப் போலவே இந்தியாவில் சிறந்த இறுக்கமான தலைமைத்துவத்தைப் பேணும் தலைவர்கள் இந்திரா காந்தியின் பின்னால் இல்லை என்பதுவும் ஒரு காரணம்.

இன்றைய சீனாவின் அபரிமித பொருளாதார இராணுவ வளர்ச்சிதான் எதிர்காலத்தில் அமெரிக்கா எதிர் கொள்ளப் போகின்ற மிகப் பெரிய பிரச்சனை.

சோவியத் அமெரிக்க பனிப்போர் பெற்றிருந்த முக்கியத்துவத்தை சீன அமெரிக்க ஆதிக்கப்போர் பெறப் போகின்றது. எதிர்கால வல்லரசு ஆதிக்கப்போட்டியின் மையம் இந்து சமுத்திரப் பிராந்தியம் என்னும் போது ஈழப் பிரச்சனையில் காட்டும் அக்கறை என்பது ஒரு சாட்டாக இருக்கப் போகின்றது.

அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கவனித்தால் அது சீனாவைச் சுற்றி ஒரு வியூகம் அமைக்கத் தொடங்கியிருப்பதைப் பார்க்கலாம்.

சீனாவும் புரிந்து கொண்டு அதன் அயல் நாடுகளைச் சேர்த்துக் கொண்டு வியூகம் அமைக்கத் தொடங்கிவிட்டது.

thamillvaanan said...

Sri Lanka's CID finds internal support in Army Headquarters bombing
Wednesday, April 26, 2006, 10:50.
"She got other relevant information, including the Commander?s movements, vehicle identifications and daily routings."

Apr 26, Colombo: Preliminary investigations by the Police's Criminal Investigation Department (CID) revealed that yesterday's LTTE suicide cadre got internal support for the attempted murder of Sri Lanka's Army Chief Sarath Fonseka.

Suicide LTTE cadre got all the support internally,? an officer engaged in the investigation told ColomboPage.

It was found that the female cadre got an entry pass to the highly secured military hospital via her suspected personal connections with a member of the military personnel.

?She got other relevant information, including the Commander?s movements, vehicle identifications and daily routings,? the officer added.

He said the LTTE cadre had visited the Army hospital a few times and familiarized herself with the security guards.

?We have another aspect that whether she had any relationship with military personnel or she lives together with someone who works inside the Army Headquarters,? he added.

மேற்குறிப்பிட்ட விடயங்களை பார்க்கும்போது சிறிலங்கா இராணுவத்துக்கு அதிர்ச்சியளிக்ககூடிய பல செய்திகள் இருக்கின்றன. எப்போது புரிந்துகொள்ளபோகிறார்கள்?

அதனைவிடுத்து அப்பாவிமக்களின் குடியிருப்புகள் மீது குண்டுபோடுவதன்மூலம் இதற்கு தீர்வுகாணலாம் என இப்போதும் எண்ணும் இவர்களை என்ன சொல்லமுடியும்?

Anonymous said...

appa appavi singala makkalai thami kaadaijarkal veddurathukku enna thervunkoo saamikale!

இளந்திரையன் said...

தமிழ்வாணன், அன்னனி மற்றும் இராயாகரன் உங்கள் வருகைக்கு நன்றி.

அனானி, உங்கள் கேள்விக்குப் பதில் சிங்களத் தேசியம் தமிழ்த் தேசியத்தின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் மதித்து நடப்பது.

தலையிருக்க வாலைப் பிடிப்பதுபோல அடிப்படைப் பிரச்சனையை விட்டுவிட்டு இடையில் நின்று குழம்பிக் கொள்கின்றீர்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சனை என்பது வேலிபிடி சண்டையல்ல.
இது வாழ்வதற்கான தங்கள் இருப்புக்கான ஆதாரப்பிரச்சனையில் தமிழர்கள் போராடுகின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இராயாகரன்,

நீண்ட கட்டுரையை பின்னூட்டமாக அனுப்பியிருக்கின்றீர்கள். தேசியம் என்றும் அழியாது. தேசியத்தை யாராலும் அழிக்க முடியாது. ஒரு இன மொழி அடையாளங்களுடன் பொருண்மிய அடையாளங்கள் சேரும் பொழுது தேசியம் உயிர்க்கின்றது.

தமிழ்த் தேசியத்துக்கான போராட்டமே என்னையும் உங்களையும் இயக்கும் இயங்கு சக்தியாக இருக்கின்றது.

தமிழர்கள் வர்க்கத்துக்கான போராட்டத்தில் என்றுமே ஈடுபடவில்லை. வடக்குகிழக்குப் பகுதியில் பாரிய வர்க்கப் பிரச்சனை என்றுமே இருந்ததில்லை.

சாதியப் பிரச்சனையின் பாதிப்பே வேரூன்றி இருந்தது. சாதியப் பிரச்சனையைக் களையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தம்மையும் அறியாமல் சோவியத் சீன சார்பு நிலைகளை எடுத்து தம்மை ஸ்தாபனப் படுத்திக் கொண்டனரே தவிர எல்லோரும் அடிப்படையில் குட்டி பூர்ஸ்ஸுவா க்களாகவே இருந்தனர். இருக்கின்றனர்.

இவை அத்தனைக்கும் அப்பால் இன்று தமிழ்த் தேசியம் தன் இருப்புக்கான போராட்டத்தில் ஒழுங்கு பட்டிருக்கின்றது. இந்தப் போராட்டத்தின் நடைமுறைகள் பற்றிய விமர்சனங்கள் நிச்சயம் இருக்கவே செய்யும்.

சோவியத்தின் வர்க்கப்போராட்டத்திலேயே லெனினிய ரொக்ஸிய கருத்து வேறுபாடுகள் தலை தூக்கவே செய்தது.

தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகால நடவடிக்கைகளைப் பார்த்தால் அனைத்து இயக்கங்களும் சிங்களப் பேரின வாதத்தின் அடக்குமுறைக்கு எதிரான போராட்ட நோக்கத்துடனேயே ஆரம்பிக்கப் பட்டனவே தவிர வர்க்கப்போராட்ட முகாந்திரத்தினால் அல்ல.

இன்று உதிரிகளாக கலைந்து போயிருக்கும் உங்களைப் போல் சிலர் வர்க்கப் போராட்டம் புலிப் பாஸிஸம் என்று கூக்குரல் இடுவதெல்லாம் உங்களுக்கான அங்கீகாரம் கிடையாததனால் தான் என்பது எனது எண்ணம்.

அதனாலேயே சிலர் போராட்டத்தின் நோக்கத்தை மறந்து சிங்களப் பேரினவாதத்தின் கால் வருடிகளாக இருப்பது வேதனைக்குரியதே.

எதிரிக்கு செளகர்யங்களை ஏற்படுத்திக் கொடுப்பதை விட தமிழ்த் தேசியத்தின் வெற்றிக்காக வாய் மூடி மெளனம் காப்பது சிறந்தது என்பது என் அபிப்பிராயம்.

நீங்களோ இல்லை நானோ இல்லை விடுதலைப் புலிகளோ என்றும் வாழும் வரம் பெற்றவர்கள் இல்லை. ஆனால் தமிழ் தேசியம் என்றும் வாழும். அது எங்களின் முன்னாலும் இருந்தது. பின்னாலும் இருக்கும்.எப்படியென்றால் ஹோசி மின் இன் தலைமையில் போராடிய இயக்கம் சுதந்திர வியற்நாமை அடைந்தது. இன்று சுதந்திர வியற்நாமைத் தவிர யாரும் அங்கில்லை. அவர்களின் தலைமுறை நன்றி யுடன் அவர்களை வாழ்த்திக் கொண்டு அங்கு வாழ்கின்றது.

உங்களுக்கு தனிப்பட்ட இழப்புகள் ஏற்பட்டிருந்தால் அதன் வலியை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் எதற்காகப் போராடுகின்றோமோ அதன் பின்னடைவுக்கும் தோல்விக்கும் இது காரணமாகக் கூடாது.

எதிரியின் வெற்றி என்பது அவன் பலத்தால் மட்டும் விளைவதல்ல. எங்கள் பலவீனத்தாலும் என்பதை நாம் எப்பொதுழுதும் மறந்து விடக் கூடாது.

இன்று நாங்கள் தமிழராய் இருந்து நாடில்லாமல் இருக்கின்றோம். எங்கள் பிள்ளைகள் நாடும் இல்லாமல் தமிழராயும் இல்லாமல் இருப்பது உங்களுக்குச் சம்மதமோ.

இறுதியாக நீங்கள் கனவுலகில் வாழ்வதற்கு ஆசைப்படுகின்றீர்கள். நான் நனவுலகில் வாழ் ஆசைப்படுகின்றேன். இதை நீங்கள் புரிந்து கொள்ளும் போது நாங்கள் ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொள்வோம்.

-அன்புடன் இளந்திரையன்

இளந்திரையன் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

anpudan ellanthitajan avarkaluku, Rayakatanin kaddutai avatal anuppa paddathu alla.anonymous than anupinen.Rajakatanin kaddujaikal pakitanka maanavai.

இளந்திரையன் said...

இராஜாகரனின் பின்னூட்டத்திற்கான எனது பதில் வெளிவந்த பின்னர் ... என்ன இது புதுக் குழப்பம்.

இருந்தாலும் ஒரே விடயம் பற்றிய இரு பார்வைகளின் கருத்துப் பரிமாற்றம் என்ற அளவில் வாசகர்கள் சிந்திக்கட்டும்.

வெற்றி said...

//"கொழும்பு குண்டு வெடிப்பு- ஒரு சதி" //

யார் இந்தக் குண்டு வெடிப்புக்கு பொறுப்பாளிகள் என்று யானறியேன்.
ஆனால் இக் குண்டை வெடிக்கவைத்த
நபருக்கு நான் தலை வணங்குகின்றேன்.
சிங்களப் பயங்கரவாதி பொன்சேகாவால் கொல்லப்பட்ட என் உடன்பிறப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
செம்மணி வயல் வெளிகளுக்கு பேசும் வல்லமை இருந்தால் இக் கொடியவனின் கொடுமைகளை எடுத்துரைக்கும். இக் கொடியவன் இறக்கவில்லை என்ற ஏமாற்றம் இருந்தாலும், இவனுக்கு இப்படியான தண்டனையாவது கிடைத்ததே என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் காணாமல் போன தமிழர்களின் ஆயிரக்கணக்கான உறவுகளில் நானும் ஓருவன். கொல்லாமை எனும் அற்புதமான தத்துவத்தை உலகுக்கு தந்த புத்த பிரானே, உன் பெயரைச் சொல்லியே உன் தத்துவங்களை மறந்து அப்பாவித் தமிழர்களைக் கொல்லும் சிங்கள பேரினவாதிகளை மனிதர்களாக்க நீங்கள் மீண்டும் அவதரித்து வரக் கூடாதா?

Anonymous said...

// இக் கொடியவன் இறக்கவில்லை என்ற ஏமாற்றம் இருந்தாலும்//
அரை உடம்பு தான் எஞ்சியிருப்பதாகத் தகவல்!

நியோ / neo said...

இளந்திரையன்,

உங்கள் பதிலுக்கும் கூடுதல் விளக்கத்துக்கும் நன்றி.