Wednesday, January 30, 2008

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள்: அரசியல்துறைப் பொறுப்பாளர் ஐ-நாவிடம் அழைப்பு





ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் அங்கீகரித்து, கடந்த ஐந்து தசாப்தங்களாக தமிழ் மக்களிற்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டுமென, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
மன்னார் மடுவில் நேற்று சிறீலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட நாசகார கிளைமோர் தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கி மூனிற்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் நடேசன் இந்த அழைப்பினை விடுத்திருக்கின்றார்.
பாடசாலைச் சிறுவர்கள் பயணிக்கின்றார்கள் என தெரிந்திருந்தும் சிறீலங்கா படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரால் நேற்றைய மனிதவேட்டைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அரசியல்துறைப் பொறுப்பாளர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடிதத்தின் சாராம்சம்....
29-01-2008 மதியம் 2.30 மணிக்கு மன்னார் மடு-பாலம்பிட்ட வீதியில் பயணித்த பேரூந்தில் பாடசாலைச் சிறுவர்கள் பயணிக்கின்றார்கள் என்று தெரிந்தே சிறீலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரால் கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் 8-16 வயதிற்குட்பட்ட 12 பள்ளிச் சிறார்கள் உட்பட 18 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஜனவரி நான்காம் திகதி முல்லைத்தீவு உப்புக்குளத்தில் சிறீலங்கா வான் படையினர் நடத்திய தாக்குதலில் 3-16 வயதிற்குட்பட்ட ஏழு சிறுவர்கள் படுகாயமடைந்தனர். நவம்பர் 27ஆம் திகதி பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 6 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டனர்.
அதே தினத்தில் புலிகளின் குரல் வானொலி மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் வீதியால் சென்று கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு தர்மபுரத்தில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் மூவர் சிறுவர்கள். 8ஆம் திகதி நவம்பரில் அளம்பிலில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டதுடன், மற்றொரு குழந்தை தனது கால் ஒன்றை இழந்திருந்தது.
2002ஆம் ஆண்டின் போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னரும் தமிழ் பொதுமக்கள் சிறீலங்கா அரசினால் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். 2005 நவம்பர் மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்த பின்னர் 132 தமிழ் சிறுவர்கள் உட்பட 2056 பேர் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்த கண்காணிப்புக்குழு வெளியேற்றப்பட்டு, ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் உள்ளேவர அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் படுகொலைகள் அதிகரித்துச் செல்லுகின்றன. இவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கும் ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை உயரதிகாரிகள் பயங்கரவாதிகளாக சிறீலங்கா அரசினால் சித்தரிக்கப்படுகின்றனர். போர் நிறுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுனாமி மீள்கட்டுமானம், இடம்பெயர்ந்த மக்களிற்கான நிவாரணப் பணிகள் உட்பட அனைத்து ஒப்பந்தஙகளையும் சிறீலங்கா அரசு நிராகரித்துள்ளது.
எமது தீவில் அமைதியை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாம் தொடர்ந்து ஒத்தாசை வழங்கி வருகின்றோம். இதற்கு ஏதுவாக 18 அகவைக்கு உட்பட்டவர்களை எமது அமைப்பில் இணைப்பதையும் நிறுத்தியுள்ளோம்.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் அங்கீகரித்து, இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே இருக்கும் நிலையில். எமது அமைப்பு அமைதி முயற்சிக்கான முழுமையான ஆதரவை வழங்க எப்பொழுதும் தயாராக இருக்கின்றது.

கனடிய பல்கலைக்கழக விழாவில் பட்டொளி வீசி பறக்கிறது தமிழீழத் தேசியக் கொடி










கனடிய யோர்க் பல்கலைக்கழத்தில் தமிழர் சமூகத்தை, தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக உலக நாடுகளின் தேசியக்கொடிகளுடன் தமிழீழத் தேசியக்கொடி வரிசையாகப் பட்டொளி வீசிப் பறக்க விடப்பட்டுள்ளது.
யோர்க் பல்கலைக்கழக விழாக்களில் மிகப் பெரியதும் ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படும் "பல்கலாச்சார வார" நிகழ்வில் யோர்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியமும் பங்கேற்றுள்ளது.யோர்க் பல்கலைக்கழக கீல் (Keele) வளாகத்தில் பல்கலாச்சார, இன அமைப்புக்கள் ஒரே கூரையின் கீழ் கூடி உலக நாடுகளின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன.இந்நிகழ்வானது எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் நாள் திங்கட்கிழமை தொடக்கம் பெப்ரவரி 8 ஆம் நாள் வியாழக்கிழமை வரை கொண்டாடப்படுகிறது. யோர்க் தமிழ் மாணவர் அமைப்பு இந்த அணிநடையில் தமிழீழத் தேசியக்கொடியுடன் பங்கேற்கிறது.அணிநடையைத் தொடர்ந்து நடைபெறும் "உலக உடை அலங்காரம்" நிகழ்வில் தமிழர் பாரம்பரிய உடையணிந்தும் அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் நடைபெறும் நிகழ்வில் தமிழர் உணவுக்கலைகயையும் பல்கலைக்கழக சமூகத்துடன் தமிழ் மாணவர் ஒன்றியம் பகிர்ந்து கொள்ள உள்ளது.உணவுப் பரிமாற்றத்தின்போது "டிஜே வேர்ல்ட் கப்" எனப்படும் இசைப்போட்டியும் நடைபெற உள்ளது. இதிலும் தமிழர் இசைத்திறன் மேடையேற உள்ளது.

நம்பகத் தன்மையான அதிகாரப் பகிர்வு

நம்பகத்தன்மை மிக்க அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றையே (Credible Power Sharing Proposal) சர்வதேச
சமூகம் இன்றைய நிலையில் இலங்கை அரசிடமி
ருந்து எதிர்பார்க்கின்றது. அரசமைப்பின் பதின்மூன்றா
வது திருத்தத்தை நடைமுறைப்படுத் தும் திட்டம் பற்
றிய அறிவிப்பை அல்ல. கொழும்பில் சர்வதேச சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்தி
ரிகள் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றனர்.இலங்கையில் சிவில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்புகளுக்கு இடையில் சமர சம் செய்யும் முயற்சியில் சர்வதேச சமூகம் கடந்த ஏழு, எட்டு ஆண்டுகாளாக சம்பந் தப்பட்டிருக்கின்றது. இந்த வகையில் இப் பிரச்சினையை அமைதி வழியில் தீர்ப்பதற் கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இரு தரப்புகளுமே எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்றது என் றும் இராஜந்திரிகள் சுட்டிக்காட்டியிருக்கின் றனர்.இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழி முறையில் தீர்வு காண முடியாது என் பதே சர்வதேச சமூகத்தின் ஒரே நிலைப் பாடாகும்.அதிகாரப் பகிர்வின் மூலம் அனைவரா லும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை அமைதி வழியில் பெற இரு தரப்புகளும் விடாது முயற்சிக்க வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.இதை மீறி, இராணுவ வழியிலான தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்புகள் முனைப்புக் காட்டுவது சர்வதேச சமூகத்தைப் பெரும் விசனத்துக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.பேச்சு மூலம் அமைதித் தீர்வை எட்டு வதாயின் அதற்கான யோசனைத் திட்டம் ஒன்று அவசியம். அத்தகைய யோசனைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் இரு தரப் புகளும் பேச்சு மேசைக்குச் சென்று தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண் டும் என்பதையே சர்வதேச சமூகம் தனது திட்டமாக மனதில் கொண்டுள்ளது. அத்தகைய சமரச முயற்சிகளை ஊக்குவித்து, முன் னெடுப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் சர்வதேசம் காத்துத் தயாராக இருக்கின்றது.எனவே, இப்பிரச்சினைக்குச் சுமுகத் தீர்வு காணப்பட வேண்டுமானால் சிறுபான் மையினருக்கு நியாயமான அதிகாரங்க ளைப் பகிர்ந்தளிக்கும் நம்பகத் தன்மையு டைய அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றை அரசு தரப்பு முன்மொழியவேண்டும் என சர்வதேச சமூகம் உரிமையுடன் எதிர்பார்க் கின்றது.ஏற்கனவே நாட்டின் சட்டத்தில் உள்ள ஒன்றை நடைமுறைப்படுத்த முயற்சிப்ப தன் மூலம் அமைதித் தீர்வை எட்டிவிடலாம் என்ற இலங்கை அரசின் கருத்தை சர்வ தேச சமூகம் நம்பகத் தயாராக இல்லை.அதனால்தான் அத்தகைய தனது உத்தியை இலங்கை அறிவித்த போதிலும் அதற்கு ஆதரவான குரலையோ அல்லது அச் செயற்பாட்டை வரவேற்கும் அறி விப்பையோ சர்வதேச சமூகம் விடுக்க வில்லை.இந்தியா மட்டுமே இந்நடவடிக்கையை அதிகாரப் பகிர்வுக்கான முதல் நடவ டிக்கை என்று மட்டும் குறிப்பிட்டு வர வேற்புத் தெரிவித்தது.சர்வதேச சமூகம், நம்பகத் தன்மை யான அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதையே இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்கின் றது என்ற விடயத்தை இணைத் தலைமை நாடுகளும் வெளிப்படையாகத் தெரிவிக் கத் தயாராகியுள்ளன. அத்தகைய அறிவிப்பை விடுப்பதற்கான பொருத்தமான சந்தர்ப்பத்தை அவை பார்த்துக் காத்திருக் கின்றன.இவ்வாறு இலங்கைப் பிரச்சினை விவகாரத்தில் ஈடுபாடு காட்டும் நாடுக ளின் முக்கிய இராஜதந்திரிகள் உதயனுக் குத் தெரிவித்தனர்.இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகத் தின் ஒட்டுமொத்த கருத்து நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஆவணங்கள், அறிக்கைகள், அறிவிப்புகள் பல்வேறு வடிவுகளில் இனி வெளிவரும் என எதிர் பார்க்கலாம் என்றும் அவர்கள் கூறினர்

Tuesday, January 29, 2008

மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் பலி- 17 பேர் படுகாயம்

மன்னார் மாவட்டம் தட்சணாமடுப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று பிற்பகல் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 9 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சின்னபண்டிவிரிச்சான் அ.த.க. வித்தியாலய பாடசாலை மாணவர்களே இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இக்கோரச் சம்பவம் இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் பலியானவர்களின் சடலங்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் பள்ளமடு மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு சம்பவ இடத்தில் வாகனங்கள் இல்லாதிருந்த காரணத்தால் காயமடைந்த மேலும் பலர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்தாக்குதல் குறித்தும் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குறித்தும் பள்ளமடு மருத்துவமனை மருத்துவர் வெற்றிமாறனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:
இது வரை 17 சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 17 பேர் மோசமான காயங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்காக இவர்களை கிளிநொச்சி மருத்துவமனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சடலங்களில் 11 சடலங்கள் மாணவர்களினுடையது. அதேநேரம் காயமடைந்தவர்களில் 9 பேர் மாணவர்கள் ஆவர்.
படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். பலர் மோசமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சிலர் இரண்டு கண்களிலும் காயமடைந்துள்ளனர். சிலரது உடல் அவயங்கள் சிதறிக் காணப்படுகின்றன.
இவர்களுக்கான முதலுதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. ஏனையோர் படுகாயமடைந்த நிலையிலும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து மருத்துவமனைக்கு பெற்றோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தமது பிள்ளைகளைத் தேடி வருகின்றனர். சிலர் தங்களின் பிள்ளைகளைக் காணவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

Monday, January 28, 2008

உயர் தொழில்நுட்ப ராடர் கருவியை கனடா சிறீலங்காவிற்கு வழங்கியுள்ளது

சிறிய படகுகளையும் துல்லியமாகக் கண்காணிக்ககூடிய அதியுயர் தொழில்நுட்ப வசதி கொண்ட 39 இலட்சம் அமெரிக்க டொலர் செலவில் கனடாவினால் தயாரிக்கப்பட்ட ராடர் கருவியை, கனேடிய அரசு சிறீலங்கா அரசுக்கு விற்றுள்ளமை தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடிய அரசின் இந்த ஆயுத விற்பனை தொடர்பான அம்பலப்படுத்தல் டேவின் பக்லீஸ் (David Pugliese) என்ற ஊடகவியலாளரால் இன்று வெளியான "தி ஒட்டாவா சிட்டிசன்" (The Ottawa Citizen) என்ற பத்திரிகை மூலம் அம்பலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலின் பின்னர், தன்னுடைய நாட்டின் பாதுகாப்பிற்கென 39 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உயர் கதிரியல் அலைவீச்சைக் கொண்ட இந்த ராடர் கருவியை கனேடிய அரசு, "ஒட்டாவா பாதுகாப்பு விஞ்ஞானிகள் அமைப்பு"(Ottawa defence scientists), மற்றும் "றெய்தியோன் கனடா" (Raytheon Canada) என்ற கூட்டமைப்புகள் ஊடாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தயாரித்திருந்தது.கடனாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 43 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இதற்கான எட்டு கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டன. ஆனால் சாதாரண பொதுமக்களின் தொலைத் தொடர்புகளை இந்த துல்லிய அலைவரிசைகள் குழப்புவதாக எழுந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து கனடிய அரசினால் பின்னர் இந்த பாதுகாப்பு திட்டம் கைவிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இந்த உயர் தொழில்நுட்ப ராடர்களை வெளிநாட்டு அரசுகளுக்கு விற்பனை செய்ய முயன்ற கனடிய அரசு, கனடாவின் வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் (Canadian Commercial Corporation) உதவியுடன் முதல் தொகுதியை சிறீலங்கா அரசுக்கு விற்பனை செய்திருக்கின்றது.சிறீலங்காவிற்கு உயர் ரக ராடர்களை விற்பளை செய்த பின்னர் ஏனைய நாடுகளும் அதனைப் பெற்றுக்கொளவதில் போட்டியிடுவதாக "றெய்தியோன் கனடா" (Raytheon Canada) என்ற அமைப்பின் துணைத் தலைவர் டென்னி றொபேட்ஸ் (Denny Roberts) தெரிவித்திருக்கின்றார். "றெய்தியோன் கனடா" (Raytheon Canada) என்ற அமைப்பு அமெரிக்காவில் தாய் நிறுவனத்தைக் கொண்ட ஒரு கிளை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் இந்த புதிய ராடர் கருவி மூலம் கடற்பரப்பில் 200 மைல்கல் (370 கிலோமீற்றர்) தூரத்தை துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.கனடிய அரசு உலகிலேயே அதியுயர் தொழில்நுட்பம் நிறைந்த ராடர் கருவிகளை சிறீலங்கா அரசுக்கு வழங்கியிருப்பதாக தகவல்கள் தற்பொழுது கசிந்துள்ள போதிலும், எத்தனை ராடர்கள் இவ்வாறு வழங்கப்பட்டன, எப்பொழுது வழங்கப்பட்டன என்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Wednesday, January 16, 2008

புதுவருட வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் எனது புது வருட பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்