Wednesday, January 30, 2008

கனடிய பல்கலைக்கழக விழாவில் பட்டொளி வீசி பறக்கிறது தமிழீழத் தேசியக் கொடி










கனடிய யோர்க் பல்கலைக்கழத்தில் தமிழர் சமூகத்தை, தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக உலக நாடுகளின் தேசியக்கொடிகளுடன் தமிழீழத் தேசியக்கொடி வரிசையாகப் பட்டொளி வீசிப் பறக்க விடப்பட்டுள்ளது.
யோர்க் பல்கலைக்கழக விழாக்களில் மிகப் பெரியதும் ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படும் "பல்கலாச்சார வார" நிகழ்வில் யோர்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியமும் பங்கேற்றுள்ளது.யோர்க் பல்கலைக்கழக கீல் (Keele) வளாகத்தில் பல்கலாச்சார, இன அமைப்புக்கள் ஒரே கூரையின் கீழ் கூடி உலக நாடுகளின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன.இந்நிகழ்வானது எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் நாள் திங்கட்கிழமை தொடக்கம் பெப்ரவரி 8 ஆம் நாள் வியாழக்கிழமை வரை கொண்டாடப்படுகிறது. யோர்க் தமிழ் மாணவர் அமைப்பு இந்த அணிநடையில் தமிழீழத் தேசியக்கொடியுடன் பங்கேற்கிறது.அணிநடையைத் தொடர்ந்து நடைபெறும் "உலக உடை அலங்காரம்" நிகழ்வில் தமிழர் பாரம்பரிய உடையணிந்தும் அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் நடைபெறும் நிகழ்வில் தமிழர் உணவுக்கலைகயையும் பல்கலைக்கழக சமூகத்துடன் தமிழ் மாணவர் ஒன்றியம் பகிர்ந்து கொள்ள உள்ளது.உணவுப் பரிமாற்றத்தின்போது "டிஜே வேர்ல்ட் கப்" எனப்படும் இசைப்போட்டியும் நடைபெற உள்ளது. இதிலும் தமிழர் இசைத்திறன் மேடையேற உள்ளது.

No comments: