Wednesday, January 30, 2008

நம்பகத் தன்மையான அதிகாரப் பகிர்வு

நம்பகத்தன்மை மிக்க அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றையே (Credible Power Sharing Proposal) சர்வதேச
சமூகம் இன்றைய நிலையில் இலங்கை அரசிடமி
ருந்து எதிர்பார்க்கின்றது. அரசமைப்பின் பதின்மூன்றா
வது திருத்தத்தை நடைமுறைப்படுத் தும் திட்டம் பற்
றிய அறிவிப்பை அல்ல. கொழும்பில் சர்வதேச சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்தி
ரிகள் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றனர்.இலங்கையில் சிவில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்புகளுக்கு இடையில் சமர சம் செய்யும் முயற்சியில் சர்வதேச சமூகம் கடந்த ஏழு, எட்டு ஆண்டுகாளாக சம்பந் தப்பட்டிருக்கின்றது. இந்த வகையில் இப் பிரச்சினையை அமைதி வழியில் தீர்ப்பதற் கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இரு தரப்புகளுமே எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்றது என் றும் இராஜந்திரிகள் சுட்டிக்காட்டியிருக்கின் றனர்.இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழி முறையில் தீர்வு காண முடியாது என் பதே சர்வதேச சமூகத்தின் ஒரே நிலைப் பாடாகும்.அதிகாரப் பகிர்வின் மூலம் அனைவரா லும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை அமைதி வழியில் பெற இரு தரப்புகளும் விடாது முயற்சிக்க வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.இதை மீறி, இராணுவ வழியிலான தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்புகள் முனைப்புக் காட்டுவது சர்வதேச சமூகத்தைப் பெரும் விசனத்துக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.பேச்சு மூலம் அமைதித் தீர்வை எட்டு வதாயின் அதற்கான யோசனைத் திட்டம் ஒன்று அவசியம். அத்தகைய யோசனைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் இரு தரப் புகளும் பேச்சு மேசைக்குச் சென்று தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண் டும் என்பதையே சர்வதேச சமூகம் தனது திட்டமாக மனதில் கொண்டுள்ளது. அத்தகைய சமரச முயற்சிகளை ஊக்குவித்து, முன் னெடுப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் சர்வதேசம் காத்துத் தயாராக இருக்கின்றது.எனவே, இப்பிரச்சினைக்குச் சுமுகத் தீர்வு காணப்பட வேண்டுமானால் சிறுபான் மையினருக்கு நியாயமான அதிகாரங்க ளைப் பகிர்ந்தளிக்கும் நம்பகத் தன்மையு டைய அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றை அரசு தரப்பு முன்மொழியவேண்டும் என சர்வதேச சமூகம் உரிமையுடன் எதிர்பார்க் கின்றது.ஏற்கனவே நாட்டின் சட்டத்தில் உள்ள ஒன்றை நடைமுறைப்படுத்த முயற்சிப்ப தன் மூலம் அமைதித் தீர்வை எட்டிவிடலாம் என்ற இலங்கை அரசின் கருத்தை சர்வ தேச சமூகம் நம்பகத் தயாராக இல்லை.அதனால்தான் அத்தகைய தனது உத்தியை இலங்கை அறிவித்த போதிலும் அதற்கு ஆதரவான குரலையோ அல்லது அச் செயற்பாட்டை வரவேற்கும் அறி விப்பையோ சர்வதேச சமூகம் விடுக்க வில்லை.இந்தியா மட்டுமே இந்நடவடிக்கையை அதிகாரப் பகிர்வுக்கான முதல் நடவ டிக்கை என்று மட்டும் குறிப்பிட்டு வர வேற்புத் தெரிவித்தது.சர்வதேச சமூகம், நம்பகத் தன்மை யான அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதையே இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்கின் றது என்ற விடயத்தை இணைத் தலைமை நாடுகளும் வெளிப்படையாகத் தெரிவிக் கத் தயாராகியுள்ளன. அத்தகைய அறிவிப்பை விடுப்பதற்கான பொருத்தமான சந்தர்ப்பத்தை அவை பார்த்துக் காத்திருக் கின்றன.இவ்வாறு இலங்கைப் பிரச்சினை விவகாரத்தில் ஈடுபாடு காட்டும் நாடுக ளின் முக்கிய இராஜதந்திரிகள் உதயனுக் குத் தெரிவித்தனர்.இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகத் தின் ஒட்டுமொத்த கருத்து நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஆவணங்கள், அறிக்கைகள், அறிவிப்புகள் பல்வேறு வடிவுகளில் இனி வெளிவரும் என எதிர் பார்க்கலாம் என்றும் அவர்கள் கூறினர்

No comments: