Thursday, May 18, 2006

சிறுவர் வாழ்வும் சர்வதேசத்தின் அலட்சியமும்

போர்க்காலச்

சூழ் நிலையில் அதிகளவில் பாதிக்கப் படுவது சிறுவர்கள் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. போர்க்காலம் இல்லாத சூழ் நிலைகளிலும் அதிகம் பாதிக்கப் படுவதும் அவர்களே என்பது யாராலும் மறுக்கமுடியா உண்மையாகும். தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வலிமையும் திறனும் அற்ற அவர்களை மற்றவர்கள் இலகுவில் ஆக்கிரமிக்கவும் சீரழிக்கவும் கூடிய வலிவற்றவர்களாகவே அவர்கள் காணப்படுகின்றார்கள்

.

சர்வ

தேச நாடுகளில் கடத்தப்படக் கூடியவர்களாகவும் விற்பனை செய்யப்படக் கூடியவர்களாகவும் இருக்கும் இவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாகவும் பாலியல் தொழிளாளர்களாகவும் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். சமூகத்தின் பல வழிகளிலும் சீரழிக்கப் படும் இவர்களைப் பாதுகாக்க 60 ஆண்டுகளாக முன்னெடுக்கப் பட்ட வழிமுறைகள் அனைத்தும் உள்ளெடுக்கப்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட சாசனம் ஒன்று 1989 இல் அனைத்து நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்படக் கூடிய வகையில் ( Convention on the rights of the child ) உருவாக்கப் பட்டது.

உலகெங்கும்

ஜனநாயகம் பற்றியும் சிறுவர் உரிமை பற்றியும் வாய்கிழியக் கத்தும் அமெரிக்காவும், சோமாலியாவும் இதை நடை முறைப்படுத்த மறுத்து விட்டன

.

இச் சாசனம் குறிக்கும் இரண்டு முக்கிய சரத்துகளாக பின்வரும் விடயங்கள் விரிவு படுத்தப்பட்டன

.

1.

சிறுவர் விற்பனை, சிறுவர் விபச்சாரம் மற்றும் பாலியல் சீரழுவுகளுக்கு உட்படுத்துவதற்கு எதிரான சரத்து 2002 ஜனவரி 18 இல் இருந்தும்

,

2.

ஆயுதப் பாவனைக்குள் சிறுவர்களை ஈடுபடுத்தலைத் தவிர்த்தல் என்பது 25 மே 2000 இலிருந்தும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிக் கொள்ளப்பட்டிக்கின்றது

.

இன்று சிறுவர் பாலியல்த் தொழிலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நாடுகள் உலகெங்கும் மிகுந்து காணப்படுகின்றன. தாய்லாந்து இந்தியா இலங்கை போன்ற நாடுகள் முன்னணியில் நிற்கின்றன. பல மில்லியன் சிறுவர் சிறுமிகள் விபச்சாரத்திலும் பாலியல் சீரழிவுகளிலும் ஈடு படுத்தப் படுகின்றார்கள். ஒவ்வொரு மாதமும் 2 50, 000 சிறுவர்களும் இளைஞர்களும் H I V தொற்றுக்கு ஆளாகின்றார்கள்

.

குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நாடுகளாக ஆபிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகள் திகழ்கின்றன. இந்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்ளும் உத்தியாக குடும்ப அங்கத்தினர்களினாலேயே இது ஊக்குவிக்கப் படுகின்றது

.

250

மில்லியன் 5 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்கள் இவ்வாறு சிறுவர் தொழிலாளர்களாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் நிலமையில் 120 மில்லியன் சிறுவர்கள் முழு நேரத் தொழிலாளர்களாகவும் 50 இலிருந்து 60 மில்லியன் வரையான சிறுவர்கள் ஆபத்து நிறைந்த சூழ் நிலைகளுள்ளும் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள்

.

இரண்டு

மில்லியன் சிறுவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கிடையில் ஆயுத மோதல்களில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மூன்று மடங்கு சிறுவர்கள் நிரந்தர அங்கவீனர்களாகவோ கடுமையான காயங்களுக்கோ உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்

.

இது

இன்று சிறுவர்களின் வாழ்வியல் நிலமைகளையும் சர்வதேசத்தின் அலட்சியத்தையும் காட்டப் போதுமான தரவுகளாகும். இவை அனைத்தும் .நா.சபையின் சிறுவர்களுக்கான உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள் கூறும் செய்திகளாகும்

.

இலங்கையின்

சிங்கள இராணுவத்தின் செல்லடிகளிலும் ஆகாய தரை குண்டு வீச்சுத் தாக்குதலினாலும் தினம் தினம் செத்து மடியும் சிறுவர்களினதும் அனாதைகளாக்கப் படும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அளவிட முடியாதது. அதே போல் தமது ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கான போரியல் தளபாடங்களைக் கொள்வனவு செய்யும் பண வரவிற்கான ஒரு வழியாக உல்லாசப் பயணத் துறையை ஊக்குவிக்கும் சாக்கில் சிறுவர் பாலியல் சீரழிவுகளை சிங்கள் அரசாங்கமே ஊக்குவிக்கின்றது. இலங்கையின் அழகு மிகு கடற்கரைப் பிரதேசங்கள் எங்கும் இத்தகைய அசிங்கங்களைக் காணலாம்

.

தாய்லாந்திற்கு

அடுத்தபடியாக சிறுவர் விபச்சாரத் தேவைகளுக்காக அலையும் மன நோய் பிடித்த நோயாளிகள் உல்லாசப் பிரயாணிகள் என்ற போர்வையில் தெரிவு செய்யும் இடம் இலங்கையாகும். தனிப்பட்ட முதலாளிகளும் சிங்கள அரசாங்கமும் இணைந்து ஊக்குவிக்கும் ஒரு துறையாக இது இருக்கின்றது. போர் வெறியினால் பலியிடப்படும் இளைஞ்ர்களாகவும் பாலியல் தேவைகளுக்காகப் பலியிடப்படும் சிறுவர்களாகவும் இருப்பவர்கள் சிங்கள ஏழை மக்களின் குழந்தைகளே

.

அதேபோல

பயங்கர ஆயுதங்களின் பரீட்சார்த்தக் களமாக இருக்கும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சிங்கள இராணுவத்தின் படைகளால் கொன்றொழிக்கப் படுபவர்களில் தமிழ்ச் சிறுவர்களும் பெண்களுமே அதிகளவில் காணப்படுகின்றார்கள்

.

இத்தனை

அழிவுகளையும் அவலங்களையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேச சமூகம் தாய் தந்தையை, கூடப் பிறந்தவர்களை, உற்றார் உறவினர்களை இழந்தவர்கள் எதிரியின் கைகளில் அகப்பட்டு வீணே இறப்பதற்கு மறுத்து எதிரியைக் கொன்று அழிப்பதற்குப் புறப்பட்டால் மட்டும் சிறுவர் படையென்றும் சிறுவரை படைகளில் சேர்ப்பது சர்வதேச விதிகளுக்கு முரணானது என்றும் வெற்றுக் கூப்பாடு போடுகின்றார்கள்

.

இலங்கை

இராணுவத்தின் காட்டுமிராண்டி போர் முறைகளையும் அப்பாவி மக்களின் வாழ்விடங்கள் மீது தரை கடல் வான் வெளித் தாக்குதலை தடுத்து நிறுத்தும் வல்லமையும் உண்மையான அக்கறையும் உங்களுக்கு இருந்தால் மட்டும் வாருங்கள். எம் கையில் தூக்கியிருக்கும் ஆயுதங்களை தரையில் போட்டுவிட்டு மனித நேயத்தைப் பற்றிப் பேசுவதற்கு நாம் உண்மையான அக்கறை கொண்டுள்ளோம் என்பதை உங்களுக்கு தமிழ் ஈழத்தின் பாவப்பட்ட சிறுவர்களான நாங்கள் உறுதி கூறுகின்றோம். அதுவரை எமது எதிரிகளுடன் போராடுவதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்தவோ தடை செய்யவோ முடியாது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

No comments: