Saturday, February 02, 2008

இந்திய இராணுவ உதவியை நிறுத்தக் கோரும் ஒரு லட்சம் கையெழுத்துகள் ஒப்படைப்பு





























சிறிலங்காவுக்கு இந்தியா இராணுவ உதவி செய்யக்கூடாது என்று தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மட்டும் பெறப்பட்ட ஒரு லட்சம் கையெழுத்துக்களை ஒப்படைக்கும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
உடுமலைப்பேட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஒரு இலட்சம் கையெழுத்துகள் ஒப்படைப்பு நிகழ்வுக்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.
பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாக திரண்டிருந்தனர்

No comments: