Tuesday, February 05, 2008

இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்தால் சர்வதேச நிதி உதவிகள் ஸ்தம்பிக்கும் கொழும்புக்கான நெதர்லாந்துத் தூதுவர் எச்சரிக்கை

இலங்கையில் மோதல் தீவிரமடைந்து, யுத்தம் மோசமாகி, உயிரிழப்புகள் அதிகரித்தால் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதி உதவிகள் ஸ்தம்பிக்கும் என்று கொழும்புக்கான நெதர்லாந்துத் தூதுவர் ரேய்னோட் வன் டிக் தெரிவித்துள்ளார்.
இணைத்தலைமை நாடுகள் யுத்தம் தீர்வில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளதால் இதுவே தர்க்க ரீதியான விளைவாக அமையும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.ஆங்கில வார இதழொன்றிற்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, கருணா ஐரோப்பாவிற்குள் தப்புவதற்கு உதவிய நபரை ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு கையாளும் என்ற கேள்விக்கு "குற்றவாளிக்கும் அவரைப் பாதுகாத்தவருக்கும் இடையில் நெருங்கிய ஒத்துழைப்புக் காணப்பட்டதற்கான ஆதாரம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் குற்றச் செயலிற்கு ஒத்துழைத்தவர்களாகக் கருதப்படுவது சட்டரீதியாகப் பொதுவான விடயம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். "இலங்கையின் ஆட்சியாளர்கள் குறித்தோ அல்லது உயர் குழாம் குறித்தோ இதனைத் தாம் தெரிவிக்கவில்லை' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கருணாவின் தற்போதைய நிலை முழுக்க முழுக்க இலங்கைக்கும் பிரிட்டனிற்கும் இடைப்பட்ட விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் விடுதலைப் புலிகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதால் அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தூதுவர், அரசும் இவ்வாறு செயற்பட்டால் அதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.ஸிம்பாப்வே அரசின் மனித உரிமைக் கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் அந்த நாட்டின் 150 அதிகாரிகளுக்கு இவ்வாறான தடை விதிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்."இலங்கையில் என்ன நடைபெறுகின்றது என்பது நிரூபிக்கப்பட்டாலே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கையில் இந்த நிலை ஏற்படாது என எதிர்பார்க்கின்றேன். எனினும், மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சர்வதேச சமூகத்திற்கு சொல்வதற்கு ஜனாதிபதி முயல்வார்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் நடைபெற்றாலும் மனிதாபிமானப் பணி தொடரும் அந்தச் செவ்வியில் அவரிடம் கேட்கப் பட்ட ஓரிரு முக்கிய கேள்விகளும் பதில்களும் வருமாறுகேள்வி - இலங்கை முழு அளவில் யுத்தம் ஒன்றுக்குள் குதித்தால் சர்வதேசத்தின் பெறுபேறு என்னவாக இருக்கும் பதில் - சர்வதேச சமூகத்தின் பிரதிப லிப்பை ஏற்கனவே நாம் எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டோம். சர்வதேச சமூகத்தின் பிரதிபலிப்பு மூன்று கட்டங்களைக் கொண்டது."இராணுவ நடவடிக்கை மூலம் வட பகுதியைத் துப்புரவு செய்யப்போகிறோம்" என ஜெனரல் பொன்சேகா கூறியிருக் கிறார். இந்த நிலையில் யுத்தம் இடம் பெற்றாலும் இடம்பெறாவிட்டாலும் எமது மனிதாபிமானப் பணிகள் தொடரும். பொது மக்களுக்கு எமது உதவிகள் அவசியம். தேவைப்படுவோருக்கு அவசரகால உதவிகளை வழங்கும் செஞ்சிலுவைச் சர்வதே சக்குழு, ஐ.நா. அகதிகள் தூதரகம் போன்றவற்றுக்குப் பெருமளவு நிதி ஒதுக்கப் படுகின்றது. அது தொடரும்.அடுத்தது எந்தப் பிணக்குத் தொடர்ந்தாலும் மனிதாபிமான உரிமைகள் பேணப்பட வலியுறுத்துவோம். அதற்காகக் குரல் எழுப்புவோம்.மூன்றாவதாக சம்பந்தப்பட்ட தரப்பு களை அமைதி முயற்சிக்குக் கொண்டு வரத் தூண்டுவோம்.கடைசியாக பிணக்குகளில் சம்பந்தப் பட்ட தரப்புகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாடு ஒன்று உள்ளது. "பாரிஸ் கோட்பாடு" எனப்படும் இந்த இணக்கம், போரில் ஈடுபட்டுள்ள நாட்டுக்கு நிதி (பட்ஜெட்) உதவி அளிப்பது நல்ல செயன் முறை அல்ல என்று வலியுறுத்துகிறது."பட்ஜெட்"ஊடான நிதி உதவி இல்லாமல் போகும்நாம் இணங்கியுள்ள அந்த முடிவின் படி, "பட்ஜெட்"ஊடாக வழங்கப்படும் நிதி உதவிகள் அனைத்தும் இல்லாமல் போக, அத்திட்டங்களும் ஸ்தம்பிக்கும்.கேள்வி - சர்வதேசத்தின் விமர்சனம் வெறும் விரிவுரைப் பேச்சு மட்டுமே என்ற எண்ணம் இலங்கையில் உள்ளது. உங்களின் இந்த சொற்கள் தொடர்ந்து செயல்களாக மாற்றப்படாத வரையில் அந்தச் சொற்கள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று (இலங்கை) அரசு கருதுகின்றதே........?பதில்- இலங்கைக்கு "லெக்ஸர்" (விரிவுரை) வழங்க வேண்டியது அவசியம் என சர்வதேச சமூகம் நினைக்கவில்லை. காசோ லைகளில் கையெழுத்திடுவதை மட்டுமே நாம் நிறுத்துவோம். அதைக்கூடப் பகிரங்கமாகச் செய்ய வேண்டும் என்றில்லை.வெளியே பகிரங்கப்படுத்தாமல் நீண்ட காலத்துக்கு முன்னர் இது தொடர்பாக வரையறை செய்யப்பட்ட வழிகாட்டல்களை இப்போது பின்பற்றினால் மட்டுமே போதும்.இலங்கைக்குப் போதிப்பது தடுக்கப் படக்கூடாது எனச் சிலர் கருதினாலும், பெரும்பாலான நிபுணத்துவ இராஜதந்திரிகள் எப்போதுமே போதிக்கும் வேலையைச் செய்யமாட்டார்கள்.ஒரு விடயம் குறித்து உலகம் என்ன கருதுகின்றது என்று கூறுவதுடன் அவர்கள் அமைந்துவிடுவார்கள்.நாட்டில் நடைபெறுவது தொடர்பான எமது கருத்துணர்வை வெளிப்படுத்துவதற்கு, அது தொடர்பான சர்வதேச சமூகத்தின் மௌனத்தை எடைபோடு வதே சிறந்த வழியாகும். என்றார் அவர்.

No comments: