தமிழீழப்போராட்டம் பற்றி அண்மையில் தமிழக அரசியல் வாதிகளும் தமிழகத் தினசரிகளும் வெளிய்யிட்ட அறிக்கைகளின் தொகுப்பு - (எனது கருத்துக்கள் அல்ல.)
ஐ.நா வில் தமிழீழக் கொடி விரைவில் பறக்கும் : வை கோ (29/12/2005 )
-------------------------------------------------------------------------
ஐ.நா சபையிலே புதிய புதிய கொடிகள் பறக்கின்றன. எங்கள் தமிழீழக் கொடி அங்கே பறக்கும். தமிழீழம் விரைவில் மலரும் என்று அவர் சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாட்டில் கூறினார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (29/12/2005 )
------------------------------------------------
ஈழத் தமிழர்களை சாகடிக்க வேண்டும் என்று சொல்கிறபோது மற்றத் தலைவர்கள் அதைப் பார்த்து கல்லாகி இருக்கவேண்டுமா ? ஈழத்தமிழர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுள்ளவர்கள். நாட்டால் வேறு பட்டு இருக்கலாம். வீட்டால் , கலாச்சாரத்தால் , பண்பாட்டால் ஒன்றுபட்டவர்கள். யாருக்கெல்லாம் தமிழ் இரத்தம் ஓடுகின்றதோ யாரெல்லாம் தமிழன் என்ரு சொல்கிறார்களோ அவர்கள் தமிழ் அபிமானத்தோடு ஈழத்தமிழர்களைப் பார்க்க வேண்டாமா? ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான கொடுமைகள் இனியும் தொடரக் கூடாது என்று அவர் தலமை வகித்துப் பேசிய ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாட்டில் கூறினார்.
'விடுதலை ' நாளேடு ( 30/12/2005 )
----------------------------------------------
இன எதிரிகளின் புருவங்கள் ஏறி இறங்கி இற்று விழ புயலெனத் தமிழர்கள் வந்தனர் சென்னை மாநாடு குறித்து விடுதலை நாளேடு .
6 கோடித் தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு உததசீனப் படுத்தி விட முடியாது : தினமணி நாளேடு
ஈழத்தமிழர் பிரச்சினையில் மனம் குமுறி நிற்கும் 6 கோடித்தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு உதாசீனப் படுத்தி விட முடியாது என்பதை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸ நினைவில் கொள்ள வேண்டும் என தினமணி நாளேடு வலியுறுத்தியுள்ளது.
வைகோ 01/01/2006
-------------------------
இலங்கையில் சிங்கள இராணுவம் நடத்திவரு அட்டூழியங்கள் குறித்து இந்திய-சிறிலங்கா கூட்டறிக்கை மெளனம் சாதித்தது ஏன் என்று ம்திமுக பொதுச்செயலாளர் சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் நேர்காணலில் கேள்வி எழுப்பினார்.
ஈழத்தமிழருக்கு உதவுவதை ஒத்த தமிழ்ப் பணி எதுவும் இல்லை: தமிழக முதுபெரும் கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி
---------------------------------------------------------
தமிழகத்தில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாடு நடத்தப் பட்டமை குறித்த தனது மகிழ்ச்சியினையும் ஆதரவையும் தமிழகத்தின் முது பெரும் கல்வியியலாளரும் முன்னாள் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமான வா.செ. குழந்தைசாமி திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தமிழர் கொடுமைக்கு ஆளாக்கப் படக் கூடாது : மு.கருணாநிதி (01/01/2006 )
--------------------------------------------------------------------------------------------
இலங்கையில் உள்ள தமிழர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படக் கூடாது என்பதில் எங்கள் நிலைப்பாடு பழைய நிலைப்பாடுதான் என்று தி.மு.க தலைவர் மு.கருணாநிதி சென்னையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
Monday, January 02, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உங்கள் வலையை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள். இதுவும் தமிழ்மணம்தான், தற்போது இருப்பது பொங்கலுடன் நின்றுவிடும். அதற்கான சுட்டி.
http://www.nandhavanam.com/home.php
Post a Comment