Saturday, December 10, 2005

ஆ...ஆ......அம்மா

கதவைத் திறக்கையில்
கால் தடுமாறுகிறது
காத்திருப்புக்கு
யாருமில்லாது
மூடிக் கொள்கிறது

குளிரேறிய உணவும்
குண்டிச் சட்டியில்
மிட்டாயும்
குதித்துக் கைதட்டும்
பொம்மையும்

எப்போதும் போல்
இப்போதும்

எனக்கு வேண்டுவது
குளிர்ந்த கரத்துக்கு
சூடும்
மூடிய மனதுக்கு
மருந்துமாய்
ஒரு முத்தம்