பிடித்து வந்திருக்கிறார்கள்
கைகளைக் கட்டி
கதிரையோடு
தள்ளி விட்ட
அலட்சியத்தோடு
விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்
வெள்ளைத்தோல்
காயம் பட்டதுபற்றி
மனதொன்று
சிதைந்தது பற்றி
யாதொரு தெளிவில்லாமல்
என் நிறம்பற்றி
சொல்லிக்கொண்டபோது
காயம் பட்டது
அப்போது புரிந்தது
எனதும் அவனதும்
இரத்தம் போல
எனது தோலும்
அவனது உள்ளமும்
ஒரே நிறமென்று
வெட்டி மறைந்த மின்னல்
அறையின் ஒளியையும்
காவுகொண்டது
கைதடவும் நேரத்தில்
என் மன அழுக்கையும்
முன்னெப்போதையும் விட
இப்போது எனது நிறம்
மனதிற்குப் பிடித்திருக்கின்றது
Tuesday, December 27, 2005
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இளந்திரையன் உங்கள் எழுத்துரு எனக்கு தெரியவில்லை நீங்கள் என்ன எழுத்துரு பாவிக்கிறீர்களென்று எனக்கு தெரிவித்தால் உங்கள் எழுத்துருவை தரவிறக்கி உங்கள் ஆக்கங்களை பார்ப்பேன். எனது ஈமெயில்.
Birundan@hotmail.com
என்ன காரணம் என்று தெரிந்தவர்கள் கூறுவீர்களா?
இப்போது எழுத்துக்கள் தெரிகின்றன, ஆனால் உங்கள் ஆக்கத்தில் எழுதப்படும், பின்னூட்டங்கள் அனைத்தையுமே வாசிக்கமுடியவில்லை, ஏதாவது திருத்தம் செய்யவேண்டுமோ தெரியவில்லை சரி பாருங்கள்.
இப்பொழுது பிரச்சினை இல்லை என்ரு நம்புகின்றேன்.
Post a Comment