Tuesday, December 27, 2005

தெளிவு

பிடித்து வந்திருக்கிறார்கள்
கைகளைக் கட்டி
கதிரையோடு
தள்ளி விட்ட
அலட்சியத்தோடு

விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்
வெள்ளைத்தோல்
காயம் பட்டதுபற்றி
மனதொன்று
சிதைந்தது பற்றி
யாதொரு தெளிவில்லாமல்

என் நிறம்பற்றி
சொல்லிக்கொண்டபோது
காயம் பட்டது

அப்போது புரிந்தது
எனதும் அவனதும்
இரத்தம் போல
எனது தோலும்
அவனது உள்ளமும்
ஒரே நிறமென்று

வெட்டி மறைந்த மின்னல்
அறையின் ஒளியையும்
காவுகொண்டது
கைதடவும் நேரத்தில்
என் மன அழுக்கையும்

முன்னெப்போதையும் விட
இப்போது எனது நிறம்
மனதிற்குப் பிடித்திருக்கின்றது

4 comments:

பிருந்தன் said...

இளந்திரையன் உங்கள் எழுத்துரு எனக்கு தெரியவில்லை நீங்கள் என்ன எழுத்துரு பாவிக்கிறீர்களென்று எனக்கு தெரிவித்தால் உங்கள் எழுத்துருவை தரவிறக்கி உங்கள் ஆக்கங்களை பார்ப்பேன். எனது ஈமெயில்.
Birundan@hotmail.com

இளந்திரையன் said...

என்ன காரணம் என்று தெரிந்தவர்கள் கூறுவீர்களா?

பிருந்தன் said...

இப்போது எழுத்துக்கள் தெரிகின்றன, ஆனால் உங்கள் ஆக்கத்தில் எழுதப்படும், பின்னூட்டங்கள் அனைத்தையுமே வாசிக்கமுடியவில்லை, ஏதாவது திருத்தம் செய்யவேண்டுமோ தெரியவில்லை சரி பாருங்கள்.

இளந்திரையன் said...

இப்பொழுது பிரச்சினை இல்லை என்ரு நம்புகின்றேன்.