Tuesday, December 20, 2005

ஒரு வரவுக்காய் நானும்

அன்றைப் போலவே
இன்றும் எல்லாம்
முடிந்து விட்டது

சிரிப்பும் சிறுகெக்கலிப்பும்
கம்மலும் இருப்பும்
கதவு சாத்திப்போய்விட்டது

ஒரு வரவுக்காய்
நானும்
ஒரு செலவுக்காய்
இவர்களும்
மூடிய அறைகளுக்குள்

பதினாறு வயதில்
திருவிழா போலவே
இருந்தது
முப்பது வயதிலும்
முடியாமல் போனது

கூண்டுக்குள்
அடைபட்ட கிளி
சிறகடித்துச் சிறகடித்துச்
சிறகுதிர்த்தது

கூண்டைக் கொத்தி
இரும்பை வளைக்கும்
முயற்சியில்
சொண்டு மட்டும்

பச்சைப் பசேல் காடும்
பறந்து திரியும்
உரிமையும்
கிளிக்கு மட்டும்தானா?

No comments: