Tuesday, December 27, 2005

நீளும் பொழுது

கழுவித் துடைத்து
நாரி நிமிர்த்த
சுருட்டி இழுக்கும்
முதுகு வலி

ஈரம் துடைக்கும்
விரல்கள்
சிக்கிக் கொள்ளும்
கிழிசல்

'அம்மா வர்ரேன்'
கனத்துத் தொங்கும்
வார்த்தைகள்
வீட்டின் திசைகளுக்குள்
ஒட்டிக் கொள்ளும்

முன் படிகள்
கால்கள் தாண்ட
குளிர் காற்றின்
உரசலில்
விடைக்கும் மூக்கு
'ச்..சூ...........ய் '

கந்து வட்டிக்
கடன்காரன்
கண்ணீர் தீர்த்த
பட்டினிப் பிள்ளை
ஊதல் காத்தில்
போதைதீர்க்கும்
புருஷன்

யார்
நினைத்திருப்பார்கள்?

பிசிறிய ஒளியில்
வெளுத்திருந்த
பிறை
மரங்களின் தலையில்
ஒழுகிய
வெளிச்சக் கரைசல்
இருட்டைப் பறித்து
துப்பிய வழி

கொடிய விஷங்கள்
கருக்கும்
கணங்களுள்
எட்டி வைக்கும்
கால்களில்
நீளும் பொழூது

No comments: