Sunday, December 18, 2005

இணையமும் மொழிகளும்

புலம் பெயர் நாடுகளிலெல்லாம் இப்போ ஒரு புது விடயம் (இது புது விடயமே இல்லை கால காலமாக இருந்து வரும் பிரச்சனைதான்) - எப்போதும் புதிது போல் தோன்றுவதாலும் புதிதாய் இருப்பதாய் எண்ணுவதாலும் - பேசப் பட்டு வருகின்றது.

விட்டு விட்டுப் புயல் அடிப்பது போல ஊடகத்துறையில் அது சம்பந்தப் பட்டவர்களாலோ இல்லை கல்வி வேள்விகளில் சிறந்தவர்களாலோ அல்லது சமூக அக்கறை கொண்டவர்களாலோ அடிக்கடி கிளறப் பட்டு பிரச்சனையின் (பிரச்சனை என்று நினைத்தால்) நீள அகலங்கள் கிழிக்கப் பட்டு சத்திர சிகிச்சை செய்யப் படுகின்றது. தெரிந்தோ தெரியாமலோ விளங்கியோ விளங்காமலோ சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களின் எண்ணங்கள் ஆசைகள் அல்லது நிராசைகள் அனைத்தும் பதிவிடப் படுகின்றன. மொழிகளின் நசிவு அல்லது வழக்கொழிவு எனப்படுதலில் நாம் தமிழராய் இருப்பதனால் தமிழ் மொழியின் நசிவு அல்லது வழக்கொழிவு என்பது பற்றிய கருத்தாடலாகவே இப்பரிமாற்றங்கள் புலம் பெயர் மண்ணில் அடிக்கடி நிகழ்கின்றது. தமிழ் மொழி சாகாது என்ற வாதமும் சாகக் கூடாது என்ற அங்கலாய்ப்பும் சாவதைத் தடுக்கமுடியாத கையறு நிலையில் இருப்பதான பதிவுகளும் இக் கருத்தாடல்களில் ஊடாடுவதைக் கேட்கக்கூடியதாக இருக்கின்றது. இது பற்றிய தொடக்க நிலை விவாதமாக இதை எடுத்து வருகின்றேன். ஆர்வமுள்ளவர்கள், தெளிவுள்ளவர்கள் உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்யும் போது இதுவொரு பரந்து பட்ட கருத்துக் கணிப்பு மையமாக செயற்படக் கூடும். உங்கள் எண்ணங்களைத் தொடர்ந்து எனது கருத்துக்களையும் முன்வைப்பேன்.

2 comments:

Maravandu - Ganesh said...

தலைவா நீங்க கனடா இளந்திரையனா ?
எப்படி இருக்கிங்க
ரொம்ப நாளா பாக்கமுடிலை

என்றும் அன்பகலா
மரவண்டு

இளந்திரையன் said...

ஆமா சார் ..எப்படி இருக்கீங்க.. உங்க ஹைக்ஹூ எல்லாம் செளக்கியமா?

-அன்புடன் இளந்திரையன்