Monday, December 26, 2005

பணம் பந்தியிலே....

என்னாது பணம் பந்தியிலேன்னு ஒரு தலைப்பூ.. காதில பூச்சுத்துரவங்களைப் பாத்திருக்கோம் ... இது என்னா தலைப்பூன்னு யோசிச்சா.. அதாங்க கிரீடம் மகுடம்ன்னு எத்தனை பேர் சொன்னாலும் ... எண்சாண் உடம்புக்கும் தல எத்தனை முக்கியமோ அத்தனை தூரம் வாழ்க்கைக்கு பணம் முக்கியம்னதால இது தலைப்பூ அப்பிடீயாச்சுங்க...

பணத்துக்கு செல்வம்னு இன்னொரு பேர் இருக்கில்லியா... செல்வம்ன்னா அது செல்வாக்குன்னு அர்த்தம். அவன் செல்வாக்கானவன் அப்பிடீன்னு சொன்னா அவன்கிட்ட செல்வம் இருகுன்னு பொருள். இதிலிருந்து என்னா புரியுதுன்னா வாழ்க்கையில் செல்வாக்கு வேணும்னா செல்வம் இருக்கணும்.

இது தெரிஞ்சுதான் 'பணம் பத்தும் செய்யும் ' பணம் இல்லாதவன் பிணம்' என்னு பல பழமொழிகளை சொல்லிப் போயிருக்காங்க.

'பணம் கையிலிருந்தால் முகத்தில் தானாகவே அழகுண்டாகி விடும்' என்கிறார் கதே என்கிற அறிஞ்ர். இதை கதை அப்பிடின்னு கவனத்திற்கு எடுக்காமல் விட்டுடாதீங்க. முகத்துக்கு அழகு தரும் அழகு சாதனப் பொருட்களில் முதன்மையானது பணம்னு தான் சொல்லுவேன். பணமுள்ளவர்களையெல்லாம் பாருங்க. என்னா மினுங்கு மினுங்குகிறார்கள்.

பணம் வந்தா உள்ளத்தில ஒரு ஒளிவந்திடுங்க... உள்ளத்தில ஒளி வந்தால் வாக்கினிலே ஒளி வந்துடும்னு சொல்வாங்க.. அதாங்க செல்வாக்கு. அதனால் தான் இல்லாதவன் சொல் சபையேறாது அப்பிடீன்னு சொல்லியிருக்காங்க. அதனால் தானோ என்னவோ 'உழைப்புக்கும் வாழ்விற்கும் ஆதாரமான அவசியமான பொருள் பணம்' அப்பிடீன்னு நேரு கூட சொல்லியிருக்கிறார். உலகில் அழகும் உயிரும் உள்ளது பணம்னு திருக்குர் ஆனும் சொல்லுறது.

ஆண்டவன் படைப்புகளில் சிறந்தது மனிதன் தான்னு சொல்வாங்க.. மனிதன் படைப்புகளிலேயே சிறந்தது பணம்னுதான் நான் சொல்லுவேன். உலகின் அத்தனை பொருட்களையும் வாங்கிக் கொள்ள உதவி செய்யக் கூடியது பணம் தாங்க...


உலகிலேயே அமேரிக்கா இன்னைக்கு முதல் நாடுன்னு சொன்னா.. அது அங்கே இருக்கின்ற பனத்தை வைச்சும் அந்த பணத்தை வைச்சு அது தேடிக் கொண்டிருக்கிற வளர்ச்சியை வைச்சும் தாங்க.... இலக்கியம் கலை நாகரீகம்னு பார்த்தா எத்தனையோ நாடுகள் முதலிடத்துக்கு போட்டி போடுங்க.. அனா இந்தப் போட்டியிலயும் முதலிடம் பணத்துக்கு தாங்க...

' ஒரு நாடோ மனிதனோ உயர்வடைய வேண்டுமென்றால் பணத்தைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் சுபீட்சமாக வாழ முடியும்' சொன்னது யாரு தெரியுமா ? பொருளாதார விற்பன்னர் ஆடம் ஸ்மித்.

இன்று எங்கு பார்த்தாலும் சீனா பற்றிய பேச்சு. எங்கோ தொலை தூரதில கேட்ட சீனாவின் குரல் இன்னைக்கு காதுக்கு அருகிலேயே கேட்கிறதுன்னா என்னா காரணம்... சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி,செல்வம்...பணம் இருந்தால் போகமுடியாத தொலைவுகளே கிடையாது... அண்மையில் அண்ட வெளிக்கே போய் வந்திருக்கிறார்கள் மிகப் பெரிய செல்வச் சீமான்கள்.

ஆகவே பணம் பந்திக்கு வந்திரிச்சு.... இப்போ போய் கல்வியா வீரமா செல்வமான்னு பட்டி மன்றம் வீண் வேலையப்பூ.... கல்வியில சிறந்தவனும் பணம் சம்பாதிக்கத்தான் வேலை தேடிப்போறான். வீரத்தில சிறந்தவனும் விளையாடிப் பணம் சேர்க்கப் போறான் ...இல்லை பட்டாளத்துக்குப் போய் பணம் பாக்குறான்.

பணம் இல்லைன்னா நம்ம பேச்சைக் கேட்க ஆளே கிடையாதுங்க... ' இல்லானை இல்லாளும் வேண்டாள் ' அப்பிடீன்னு நம்ம வள்ளுவரும் சொல்லியிருக்கிறாருங்க..

சரீ பணம் பந்திக்கு வந்திரிச்சு... நாமளும் அந்த பந்தியில சேரணும்னா பணம் வேணுமே.... என்னா பண்ணலாம்?


நாம எல்லாரும் பணத்தை பாத்திருக்கிறோம்.. தொட்டுப் பாத்திருக்கோம்.. அதைக் கொண்டு எங்களுடைய வேலைகளைச் செய்ய வைச்சிருக்கோம்...
ஆனா..... அதை பிடிச்சி வைச்சுக்கத்தான் தெரியல்லே...

உலகில் ஆபத்தான இடம் எதுவென்னு கேட்டால் ''வரவை மீறின செலவிருக்கிற இடம்னு'' தான் சொல்லுவேன். வரவை மீறாத செலவு வாழ்க்கையில முதல்ல நிம்மதியைக் கொண்டாந்துடும்.

அப்பிடீன்னா நாம செளக்கியம்னு அர்த்தங்க...

ஏழைகளின் நாணய உற்பத்திச்சாலை சேமிப்புன்னு சொல்லுறார் அறிஞர் கதே. அப்புறம் என்னா தயக்கம்... பணக்காரனாகிற வழி கண்டு பிடிச்சாச்சா.... இனி பணக்காரராக வேண்டியது தான பாக்கி...

நம்முடைய வாழ்க்கை ஒரு நிலம்னு பாத்தா... உழைப்பும் சேமிப்பும் அதில நாங்க போடுற விதைங்க... இவை இரண்டும் சரியா இருந்துட்டா ... அப்புறம் என்னாங்க பண அறுவடைதான்... இதில எதுவொன்னு சரியா இல்லன்னாலும் வாழ்க்கை சரியா இருக்காதுங்க. உழைப்பு சேமிப்பு இத்தோடை அறிவும் முன்னெச்சரிக்கயும் இருந்திட்டால் அவர்கள் முன்னேறுவதை யாரும் தடுத்து விட முடியாதுங்க.

' வெற்றியின் முதல் பெரும் தத்துவம் சேமிப்பேயாகும்.அதுவே அவனைச் சுதந்திர மனிதனாக்கும். ஊக்கத்தை உண்டு பண்ணும். மகிழ்ச்சி அமைதி ஆகியவற்றை நல்கும் ' என்கிறார் அமெரிக்க கோடீஸ்வரர் தாமஸ் லிப்டன்.

அப்புறம் என்னாங்க ..... அடுத்தவாட்டி வெற்றி பெற்ற மனிதர்களாக சந்திப்போமா?

4 comments:

பிருந்தன் said...

இளந்திரையன் உங்கள் எழுத்துவடிவம் புரியவில்லை எனக்கு என்ன எழுத்து பாவிக்கிறீர்கள்.

Anonymous said...

உங்கள் எழுத்து வடிவம் என்ன?

இளந்திரையன் said...

யுனிக்கோட் தான் பிருந்தன். view இற்குப் போய் encoding மாற்றிப் பாருங்கள்

பிருந்தன் said...

எனதும் யுனிக்கோட்தான் எல்லோருடைய புளக்கும் வாசிக்கக்கூடியதாக இருக்கிறது உங்களுடயதை வாசிக்க முடியவில்லை.